Wednesday, June 18, 2008

Road


Road

நான் ஸ்ரீனி என்று அறியபடுகிறேன், இந்த உலகத்தில் உள்ளது என்று நம்பபடுகிற உயிரிகளில் நானும் ஒரு உயிரி. இயற்கை என்னில் ஆதிக்கம் செலுத்துவதால் என்னால் அதை தாண்டி என்னால் ஒன்றுமே யூகிக்க இயலவில்லை.இயற்கையின் வளர்ச்சியை அழகை, ஆபத்தை, வீரத்தை, பிரம்மாண்டத்தை, அமைதியை விவரிக்க என்னால் இயலாது. இயற்கை அதன் எல்லா சுயத்தையும் நமக்கு கொடுத்துள்ளது அது அதன் இயற்கை.நான் இயற்கையை தரிசிக்கும் அனைத்து இடங்களிலும் அதன் அருகிலேயே அல்லது அதனுடனே ஒரு சாலை எனக்கு தென்படுகிறது.என்னால் இயற்கையும் சாலையும் பிரித்து பர்ர்க்க முடியவில்லை ஆம் சாலை.

உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் உங்களை வரவேற்க ஒரு சாலை காத்து கொண்டு இருக்கும், நம் வாழ்நாள் முழுவதும் நாம் அதை நம்மை அறியாமல் பார்த்து பழகி கொண்டுதான் இருக்கிறோம், ஒரு சாலை எங்கு துவங்கி எங்கு முடிகிறது என்ற வரையறை இல்லாமல் தனக்குள் ஒரு பிரம்மாண்டத்தை வைத்து கொண்டு அமைதியாக இருக்கிறது சாலை.சாலையின் வளைவு நெளிவுகள், மேடு பள்ளங்கள் அழகு இயற்கையின் மேல் வரைந்த ஒரு அழகிய சித்திரமாக காட்சி அளிக்கிறது.நாம் பயணிக்கும் பொழுது நம் பலதரப்பட்ட மக்களை, விலங்குகளை, மரங்களை, நதிகளை, காடுகளை கண்டு நம்முள் எழும் அந்த மகிழ்சிக்கு அடித்தளம் அந்த சாலை.

சாலை அது ஒற்றையடி பாதையாக இருந்தாலும், அகன்று விரிந்த நகர்புற சாலையாக இருந்தாலும் வெறிச்சோடி கிடக்கும் சாலையாக இருந்தாலும், இருபுறம் மரங்கள் சூழ நிழல் தரும் சாலையாக இருந்தாலும் அவை தனக்கே உரிய வசீகரத்தை கொண்டுள்ளது. அது மலைகளுக்குள் ஊடுருவும், நதிகளின் குறுக்கே பாயும் அதற்கு எத்தனை கிளைகள், பிரிவுகள் இருந்தாலும் எதோ ஒரே ஒருமித்த லட்சியத்தை கொண்டுள்ளது போன்று அவைகள் தனது பணியை செய்து கிடக்கும்.

சாலைகளை பற்றி நான் எழுத எழுத அதன் ஆச்சரியங்கள் விரிந்து கொண்டும் நீண்டு கொண்டும் செல்கின்றன சாலைகளுக்குதான் முடிவு இல்லை என் கிறுக்கல்களுக்கு உண்டு.

srini

1 Comments:

Blogger ​செல்​லையா முத்துசாமி said...

ஸ்ரீனி மற்றும் ஜான் அவர்களுக்கு,
chelliahmuthusamy.blogspot.com
இது என்னோட பக்கம்.

பார்த்துவிட்டு சொல்லுங்கள்

11:04 AM  

Post a Comment

<< Home