Saturday, September 03, 2011

சீமான் - செந்தமிழனா? ஜால்ரா தமிழனா?

இப்படியொரு தலைப்பில் இவ்வளவு சீக்கிரம் ஒரு கட்டுரை எழுத வேண்டிவரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். பல்லாயிரம் மனிதர்களின் லட்சியம் கண்முன் ச‌ரியும் போது அது குறித்து பேசாமலிருப்பதும்கூட ஒருவித வன்முறைதான்.

ஈழத்தமிழர்கள் சார்பான போராட்டத்தில் சீமானின் உழைப்பும், முயற்சியும், அர்ப்பணிப்பும் சந்தேகத்துக்கு அப்பார்ப்பட்டது. ஈழ விவகாரத்தில் காட்டிய முனைப்புக்காக கடந்த நாட்களில் அவரளவுக்கு தமிழகத்தில் யாரும் துன்புற்றதில்லை என்றே சொல்ல வேண்டும். தனி மனிதனாக அவரது போராட்ட குணம் என்றும் போற்றுதலுக்குரியது.

சீமான் இன்று தனி மனிதரல்ல. ஒரு கட்சியின் தலைவர். சீமான் சமூகத்தின் சீக்கை மாற்றிக் காட்டுவார் என்று நம்பும் பல்லாயிரம் இளைஞர்களின் வழிகாட்டி. என்னுடைய வாழ்க்கைதான் இந்த நாட்டிற்கு நான் விட்டுச் செல்லும் செய்தி என்று சொன்னார் காந்தி. ஒரு தலைவனின் வாழ்க்கை... சொல்லும், செயலும் அத்தகையதாக இருக்க வேண்டும். முக்கியமாக ஜனநாயகத்தன்மையுடன்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய சீமானின் பேச்சிலும், எழுத்திலும் ஜனநாயகத்தின் ஈரம் வற்றிவிட்டது. ஒற்றை ஆளாக காங்சிரஸை கருவறுத்ததாக தொடர்ந்து மேடையில் முழங்கி வருகிறார். அவரது எழுத்திலும் இது வெளிப்படுகிறது. வார இதழ் ஒன்றில், ஒற்றை நாவாக ஒலித்த துயரமும் துடிப்பும்தானே இன்றைக்கு காங்கிரஸை கருவறுத்தது என்று தன்னை மட்டுமே முன்னிறுத்துகிறார்.

நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள மறுக்கிற தலைமை எப்படி சீரழியும் என்பதற்கு கருணாநிதியே வாழும் சாட்சி. சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற காங்கிரஸ் மற்றும் திமுக வின் இன விரோதப் போக்கு ஒரு காரணமே அன்றி அது மட்டுமே காரணம் அல்ல. அப்படியிருந்திருந்தால் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த திமுக கூட்டணி அதைவிட மோசமான தோல்வியை பாராளுமன்ற தேர்தலில் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லையே. கருணாநிதியின் குடும்ப அரசியலும், விலைவாசி உயர்வும், இந்த நெருக்கடிகளை உணராதவராக கருணாநிதி தொடர்ந்து நடத்தி வந்த நாடகங்களுமே ஜெயலலிதாவை அரியணையில் அமர வைத்தது. ஈழ விவகாரத்துக்கும் இதில் பங்குண்டு... ஆனால் ஆட்சி மாற்றத்துக்கு அது மட்டுமே காரணமில்லை.

இந்த நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவராக ஈழ விவகாரம் ஒன்றே திமுக கூட்டணியை வீழ்த்தியதாக சீமான் நம்புகிறார். மற்றவர்களையும் நம்ப வைக்க முயற்சிக்கிறார். இந்த போலி நம்பிக்கை, அடைய வேண்டிய லட்சியத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கக்கூட உதவாது என்பதை ஒரு தலைவனாக சீமான் உணர வேண்டும்.

ஈழப் பிரச்சனை தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்ததில் சீமானின் பங்கு கணிசமானது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவரது ஒற்றை நாவு மட்டுமா இதற்காக துடித்தது? இன உணர்வை தட்டி எழுப்ப தன்னையே தீய்க்கு தந்த முத்துக்குமாரை சீமான் எப்படி மறந்தார். அவர் ஒன்றும் நாம் தமிழர் இயக்கத்தின் உறுப்பினர் அல்லவே. அதே போல் எத்தனை பேர் உயிர் தியாகம் செய்தனர். சீமானுக்கு முன்பே ஈழ விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிற நெடுமாறனுக்கு இதில் பங்கில்லையா. மே 17 இயக்கம், பொpயார் திராவிடர் கழகம் என்று எத்தனை எத்தனை அமைப்பினர். கோயம்புத்துh‌ரில் ராணுவத்தையே மறித்தவர்கள் பொpயார் திராவிடக்கழகத்தினர் அல்லவா. எந்த அமைப்பிலும் சாராத பல்லாயிரம் தனி மனிதர்களின் பங்களிப்பு புறக்கணிக்கக் கூடியதா?

சீமானுக்கு இவையனைத்தும் தொpயாததல்ல. தன்னால்தான் இந்த வெற்றி என்று சொன்னால் நாம் தமிழர் கட்சியின் திடீர் ரட்சகர் ஜெயலலிதாகூட ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதும் சீமானுக்கு தொpயும். ஒரு கட்சியின் தலைவராக அவருக்கு வெற்றியின் முழு அறுவடையும் தேவைப்படுகிறது. அதற்காக சீரழிந்த ஒரு அரசியல்வாதியின் தன்னல வழியில் சஞ்ச‌ரிக்கவும் அவர் தயங்கவில்லை என்பதுதான் நம்மை வருத்தமடையச் செய்கிறது. இது கோபம் அல்ல வருத்தம்... பொறாமை அல்ல வேதனை.

சட்டமன்றத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த ஈழம் தொடர்பான தீர்மானங்கள் வரவேற்கப்பட வேண்டியவை மட்டுமல்ல கொண்டாடப்பட வேண்டியவை. தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு குழி பறித்தவர்களுடன் ஒப்பிடுகையில் இதுவொரு மாபெரும் சாதனை. உளசுத்தியோடு ஜெயலலிதாவை பாராட்ட வேண்டியது கடமை. ஆனால் இதிலும் சீமான் தனக்கான அறுவடையிலேயே குறியாக இருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை நாம் தமிழர் கட்சி முன்னிறுத்திய போது பலரும் எதிர்த்தனர். பிரபாகரனை கைது செய்து இந்தியா அழைத்து வரவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் என்பதாலும், போர் என்றால் மக்கள் சாவார்கள் என்று பதிலளித்ததாலும் காங்கிரஸை தோற்கடிப்பதற்காக ஜெயலலிதாவை ஆத‌ரிக்கதான் வேண்டுமா என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினர். சட்டிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையாகிவிடக் கூடாது என்ற பயத்தில் நண்பர்கள் விடுத்த சந்தேக கேள்விதான் இது. சீமானால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

சட்டமன்றத்தில் ஈழம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும்,  பாரு... நான் எடுத்த தீர்மானம் எவ்வளவு ச‌ரி என்று தன்னை முன்னிறுத்தும் விதமாகவே ஜெயலலிதாவுக்கான பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் கடந்த காலத்தையும், ஆதரவு வேண்டுமென்றால் அவர்கள்தான் வர வேண்டும் என்று கதவை காங்கிரஸுக்காக அவர் திறந்தே வைத்திருப்பதையும் மனதில் இருத்திக் கொண்டே சீமான் பாராட்டு விழாக்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவரது பேச்சிலும் எழுத்திலும் தனிமனித துதிதான் மேலோங்கியுள்ளது. ஈழப் பிரச்சனைக்காக அதிமுக காங்கிரஸ் உறவை ஒதுக்கித்தள்ளும் என்று சீமான் கருதினால் அதைவிட நகைச்சுவை வேறு இருக்க முடியாது.

தமிழனின் சாபக்கேடு தனி மனித துதி. மானத்தையும் அறிவையும் வலியுறுத்திய பொpயாரின் பேரனின் தனி மனித துதி கடந்த சில நாட்களாக காதில் நாராசமாக விழுகிறது. சமீபத்தில் சீமான் கலந்து கொண்ட சினிமா விழாவில் இதனை கேட்க நேர்ந்தது. அதற்குமுன் அந்த விழாவில் சீமானுக்கு பக்கத்து இருக்கையில் இருந்தவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் திரையுலகின் கட்டுப்பாட்டை மீறி இலங்கைக்கு சென்று கலை விழா நடத்திய நடிகர் சல்மான்கான். அந்த விழாவின் விளம்பர துhதராக இருந்த அமிதாப்பச்சனை பின்வாங்கச் செய்த முழு பெருமையும் நாம் தமிழர் கட்சியினரையே சாரும். அமிதாப்புக்குப் பதில் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள்தான் சல்மான்கானும், விவேக் ஓபராயும். இவர்கள் தமிழகம் வந்தால் துரத்தி அடிப்போம் என்று சொன்ன அதே சீமானுக்குப் பக்கத்தில்தான் சல்மான்கான் சகல ம‌ரியாதைகளோடும் வீற்றிருந்தார்.

சல்மானை சீமான் துரத்தியிருக்க வேண்டும் என்பதல்ல நம் எதிர்பார்ப்பு. குறைந்தபட்சம் அந்த விழாவையாவது சீமான் புறக்கணித்திருக்கலாம். ஏனென்றால் சல்மான்கான்தான் அந்த விழாவின் சிறப்பு விருந்தினர் என்பது முன்பே தொpவிக்கிப்பட்டிருந்தது. அதேபோல் விவேக் ஓபராயின் ரத்த ச‌ரித்திரம் படத்தை தமிழ் உணர்வாளர்கள் புறக்கணிக்க அழைப்புவிடுத்த போது நாம் தமிழர் கட்சி மட்டும் அப்படத்தை ஆத‌ரித்தது. அதற்கு சீமான் ஒரு விளக்கம் அளித்தார். தம்பி சூர்யா அந்தப் படத்தில் நடிச்சிருக்கார்.

இந்த விழாவில் விஜய்யை பற்றி பேசிய சீமான், விஜய் தமிழகத்தில் ஒரு மௌனப் புரட்சியை ஏற்படுத்திவிட்டு அமைதியாக உட்கார்ந்திருப்பதாக குறிப்பிட்டார். தனியாக இருக்கும் போது தன்னால்தான் ஆட்சி மாற்றம் என்று சொல்லும் சீமான், விஜய் முன்னிலையில் விஜய்தான் ஆட்சியை மாற்றி புரட்சியை ஏற்படுத்தினார் என்று சாம்பிராணி போடுவது வழக்கமாகிவிட்டது. அதிமுக வுக்கு ஓட்டுப் போடுங்கன்னு ஒரு வ‌ரி சொல்வதுக்கே பயந்து அப்பா பின்னால் ஒளிந்து கொண்ட பிள்ளைப்பூச்சிதான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம் என்று விஜய்யின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிறவன்கூட சொல்ல மாட்டான். செந்தமிழனோ மேடைக்கு மேடை இதையே பேசி காதில் ரத்தம் வர வைக்கிறார். ஏன்.. நாங்க என்ன அவ்வளவு மடையன்களா?

விஜய்க்கும் புரட்சிக்கும் என்ன சம்பந்தம்? வெற்றியில் பங்குபோட அவரே கூச்சப்பட்டு அணில் மாதிரி உதவினோம் ஆட்டுக்குட்டி மாதிரி உதவினோம் என்று பேசுகிறார். சீமானோ எல்லாம் நீங்கதான் என்று துhக்கிப் பிடிக்கிறார். பகலவன் படத்துக்கு விஜய் கால்ஷீட் தர வேண்டும் என்பதைத் தாண்டி விஜய்க்கும் உங்களுக்கும் என்ன உறவு?

சுயநலமும், தனி மனித வழிபாடும் நேர்மையான போராட்டக்காரனுக்கு அழகல்ல. குறுகியகால லாபங்களுக்காக எதிர்காலம் குறித்து யோசிக்காதவன்

john babu raj

0 Comments:

Post a Comment

<< Home