Saturday, September 03, 2011

லெனின் விருது விழா - மௌனத்தின் பேரோசை


சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது. பிரபல எடிட்டரும், இயக்குனரும், குறும் படங்களுக்கு தமிழில் களம் அமைத்தவருமான லெனின் பெயாpல் வழங்கப்படும் விருது விழா. தமிழ்ஸ்டுடியோ இணையதளம் இந்த விருதை வருடந்தோறும் வழங்கி வருகிறது. குறும்பட, ஆவணப்பட துறையில் சீhpய பங்களிப்பு செலுத்துகிறவராக இருக்க வேண்டும் என்பதை விருதுக்குhpயவாpன் தகுதியாக நிர்ணயித்திருக்கிறhர்கள். அந்தவகையில் இந்த வருடத்துக்கான தேர்வு சாலப் பொருத்தம். விருது பெற்றவர் காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக அறியப்படும் ஆர்.ஆர்.சீனிவாசன்.


குறும் படம், ஆவணப் படம் சம்பந்தமான விருது விழா என்பதால் சிறப்பு விருந்தினர்களின் பேச்சு அதையொட்டியதாக இருக்கும் என நாம் எதிர்பார்த்ததில் தவறில்லை. இனிய அதிர்ச்சியாக அப்படியெதுவும் இல்லை. தனியார் மயமாகும் புறவழிச்சாலைகள், கல்பாக்கம் அணுஉலை ஆபத்து, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று போpன் துhக்குத் தண்டனை என்று செவிக்கும், சுரணைக்கும் செமத்தியான உணவு. யுடிவி யின் தலைமை நிர்வாகி தனஞ்செயன், கவிஞர் தேவதேவன், இயக்குனர் பாலுமகேந்திரா, மருத்துவர் புகழேந்தி ஆகியோர் விழாவில் பேசினார்கள். இறுதியாக விருது பெயரை தாங்கியிருக்கும் லெனின்.


சுண்டியெடுத்த வார்த்தைகளில் கவிதை வடிப்பவர் தேவதேவன். ஆனால் மேடை ஏறி மைக் பிடித்தால் வார்த்தைகள் முட்டும். எல்லா மேடைகளையும் போலவே இந்த மேடையிலும் அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டார். கலை என்றhல் அழ்ந்த அமைதி, ஒன்றுமில்லாத வெறுமை. தான் அமர்ந்திருந்த நாற்காலியை சுட்டிக் காட்டி, அது நிசப்தமாக இருக்கிறது என்றhர். தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய படம் போலிருந்தது அவரது பேச்சு. இரண்டு வார்த்தை... உடனே விளம்பர இடைவெளி. கோர்வையாக அவர் ஏதேனும் பேசிவிடுவாரோ என்று பார்வையாளர்கள் அச்சப்படுவதுபோல அரங்கத்தில் அப்படியொரு அமைதி. கலை அமைதிக்கு உதாரணமாக அவர் அப்பாஸ் கியாரஸ்தமியின் படங்களை குறிப்பிட்ட பிறகு இறுக்கம் சற்று தளர்ந்தது. என்ன அருமையான உதாரணம். தேவதேவன் கவிதையில் முயலும் மௌனத்தைதான் கியாரஸ்தமி தனது திரைப்படங்களில் சாத்தியமாக்குகிறhர். அந்த மௌனம் சாதாரணமானதல்ல, பல தினங்கள் உங்களை துhங்கவியலாமல் செய்கிற வலிமையுடையது.


தேவதேவனின் உரை பாலுமகேந்திராவை உற்சாகப்படுத்தியிருந்தது. அவரும் மௌனத்தின் காதலர். எனது மௌனங்களை அப்படியே விட்டுவிடுங்கள் என்று இளையராஜhவிடம் hP hpக்கார்டிங்கின் போது சொன்னதை நினைவுகூர்ந்தார். எனது மௌனங்களை புhpந்து கொள்ள முடியாதவர்களால் என்னுடைய வார்த்தைகளையும் புhpந்து கொள்ள முடியாது என்றhர்.
சாதகமான மேடைகளில் எல்லாம் சினிமா ரசனையை பாடமாக்குங்கள் என்று பாலுமகேந்திரா கேட்டு வருகிறhர். உங்கள் வரவேற்பறைக்கு தினம் 100 படங்கள் உங்களது அனுமதியில்லாமல் வருகின்றன. அவற்றில் மோசமானதை ஒதுக்கிற ரசனை நமது பிள்ளைகளுக்கு வேண்டாமா? நியாயமான இந்தக் கேள்விக்கு இன்னும் எத்தனை காலம் மௌனத்தை பதிலாக தரப் போகிறேhமோ.


மருத்துவர் புகழேந்தியின் பேச்சு அணுஉலை ஆபத்தை பற்றியதாக இருந்தது. இவரும், ஆர்.ஆர்.சீனிவாசனும் இணைந்து பணியாற்றியிருக்கிறhர்கள். எல்லாமே சமூகப்பணி. ஜப்பான் ஃபுகுஷிமா அணுஉலை விபத்தின் விளைவுகள் டோக்கியோவில் உணரப்படுகின்றன.  அங்குள்ள தாய்மார்களின் தாய்ப் பால் விஷமாகிவிட்டது. குடி நீhpலும் அணுக்கதிர் ஆபத்து. கல்பாக்கத்திலும் இப்படியொரு விபத்து ஏற்படாது என்று யாரும் இதுவரை உத்தரவாதம் தரவில்லை என்பதை புகழேந்தி நினைவுப்படுத்தினார். கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோது சென்னை நிலநடுக்கம் வருவதற்கான சாத்திக்கூறில் ஸேhன் 2 ல் இருந்தது. ஸேhன் 2 hpக்டர் அளவில் ஆறு வரையான நிலநடுக்கத்தை தாங்கக் கூடியது. கல்பாக்கம் அணுமின் நிலையம் 6 hpக்டர் அளவை தாங்கும் விதத்தில் கட்டப்பட்டது. இப்போது சென்னை ஸேhன் 2 லிருந்து 4 கிற்கு நகர்ந்துள்ளது. அதாவது 7.5 hpக்டர் அளவு நிலநடுக்கம்வரை சென்னையில் ஏற்பட சாத்தியமுள்ளதாக வல்லுனர்கள் தொpவிக்கிறhர்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் எவ்வளவு பொpய ஆபத்தில் இருக்கிறேhம். புகழேந்தி சொன்ன இன்னொரு தகவல் முக்கியமானது. ஃபுகுஷிமாவுக்கும் டோக்கியோவுக்கும் இடைப்பட்ட துhரம் 240 கிலோ மீட்டர்கள். கல்பாக்கத்துக்கும் சென்னைக்கும் இடையேயானது வெறும் 60 கிலோ மீட்டர்கள் மட்டுமே.


கூடங்குளத்தைவிட அதிக ஆபத்தானது கல்பாக்கம். ஆனால் கூடங்குளத்தில் போராட்டங்கள் நடக்கின்றன. கல்பாக்கத்தில் எதிர்ப்பின் சுவடேயில்லை, எல்லோரும் அமைதியாக இருக்கிறhர்கள் என்று புகழேந்தி ஆச்சாpயப்பட்டார். அணுஉலை ஆபத்தைவிட ஜனங்களின் இந்த மௌனத்தை கண்டே அவர் அதிகம் அச்சப்பட்டதாகப் பட்டது.
மௌனம்... மௌனம்.. மௌனம்...


பெருவாhpயான மக்களின் மௌனமும், அந்த மௌத்திலிருந்து உருவாகும் ஒருசிலாpன் போராட்டமுமே லெனின் விருதை உருவாக்கியதோ என்று எண்ண வைத்தது, தமிழ்ஸ்டுடியோவை தொடங்கி நண்பர்களுடன் அதனை நடத்தி வரும் அருணின் அறிமுகவுரை. புறவழிச் சாலைகள் தனியார்வசமாகி சுங்கம் வNலிப்பதை எந்த எதிர்ப்புமில்லாமல் நாம் சகித்துக் கொள்வதை தனது பேச்சில் அருண் குறிப்பிட்டார். லெனின் விருதுக்கான தேர்வில், போராட்டத்தை முன்னிறுத்தும் படைப்பை...படைப்பாளியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். ஆர்.ஆர்.சீனிவாசன் அதற்கு முழுத் தகுதியானவர்.


வியாபார நிறுவனமொன்றின் தலைமை நிர்வாகியாக இருப்பதாலா தொpயவில்லை தனியார்மயம் வேண்டும், அதனால் மக்களுக்கு தரமானவை கிடைக்கும் என்றhர் தனஞ்செயன். பிள்ளைப் பேச்சு. குறும்படம் எடுப்பவர்கள் சினிமாவுக்கு வரும் போது கமர்ஷியலாக யோசிக்க வேண்டும், அப்போதான் வியாபாரமாகும் என்றெல்லாம் பேசினார். குறும்படம் என்பது ஏதோ கூட்டுப்புழு பருவம் போலும், சினிமா எடுப்பதுதான் முழுமையடைந்த வண்ணத்துப்பூச்சி போலும் அவர் கருதிக் கொண்டிருப்பது ஆச்சாpயமளித்தது. இதற்கு கடைசியில் ஆணியடித்தார் லெனின். பாpணாமனின் கவிதையில் தொடங்கி சகல பக்கங்களிலும் உடுக்கடித்தார். நீங்க உங்க வேலையைப் பாருங்க, நாங்க குறும் படத்தையும், ஆவணப் படத்தையும் பார்த்துக்கிறேhம் என்றபோது கரகோஷம். பியூச்சர் ஃபிலிம் ஆசாமிகளின் மீது அவர் கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வு, அவர் எத்தனை துhரம் பாதிக்கப்பட்டிருக்கிறhர் என்பதை உணர்த்தியது.


ஆர்.ஆர்.சீனிவாசன் ஏற்புரையாற்றினார். மாஞ்சோலை தொழிலாளிகள் போலீஸhல் தாக்கப்பட்டு 17 பேர் மரணமடைந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். தாமிரபரணியிலிருந்து அவர்களின் சடலங்களை எடுத்ததும், அந்தப் படுகொலைக்கு திருநெல்வேலி மௌனம் சாதித்ததும் இன்றும் அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது. அவாpன் ஒரு நதியின் மரணத்தை பார்த்தவர்களுக்கு ஏற்படும் அதே உணர்ச்சி. இந்த மௌனம்தான் நதியின் மரணம் என்ற ஆவணப் படத்தை எடுக்கத் துhண்டியதாக குறிப்பிட்டார். விழாவில் சினிமா குறித்த கட்டுரை வாசிக்க திட்டமிட்டு அதனை எழுதத் தொடங்கியதாகவும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவாpன் துhக்கு தண்டனை காரணமா அதனை முடிக்க முடியாததையும் அவர் குறிப்பிட்டார். கடந்த சில தினங்களாக இந்த துhக்குத் தண்டனைக்கு எதிராக நண்பர்களுடன் ஆலோசித்து வருவதையும், 18 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சிறை நோக்கி செல்லவிருப்பதையும்,. மாத இறுதியில் லட்சம் பேர் திரளும் போராட்டத்தை ஒருங்கிணைக்க இருப்பதையும் அவர் சொன்ன போது, போராட்டமே அவரது வாழ்க்கையாக இருப்பதை உணர முடிந்தது. இன்று நாம் தெருவில் இறங்கி போராடாவிட்டால் மூன்று அப்பாவிகளின் கொலைக்கு நாம் சாட்சிகளாகயிருப்போம் என்றhர்.


முள்ளிவாய்க்கால், தனியார்மயம், அணுஉலை ஆபத்து, சினிமா ரசனை, பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு துhக்குத் தண்டனை... எல்லாவற்றிலும் மௌனமே நமது எதிர்வினையாக இருக்கிறது. கலை அமைதி என்பது போராட்டத்துக்கான விதை என்றhல் நமது மௌனம் சுரணையின்மையின் ஆழ் துயில். விழா முடிந்து இரவில் வீடு திரும்புகையில் ஒரேயொரு கேள்வி மனதில் நிறைந்திருந்தது. இந்த துயிலிலிருந்து நாம் எப்போது விழித்தெழப் போகிறேhம்?

john babu raj

0 Comments:

Post a Comment

<< Home