Saturday, September 03, 2011

ரோனின் - மாஸ்டர் இல்லாத சாமுராய்

ரோனின் என்பது ஜப்பானிய சொல். மாஸ்டர் இல்லாத சாமுராய்களை ரோனின் என்று அழைப்பது ஜப்பானிய வழக்கம். ஜான் பிரான்கென் கெய்மர் 1998ல் இயக்கிய இந்த ஆ‌க்சன் படத்துக்கும் ஜப்பானுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. ஆனால் மாஸ்டர்கள் இல்லாத சாமுராய்கள் என்ற விளக்கத்துக்கு இப்படம் சாலப் பொருத்தம்.

ஹாலிவுட் ஆ‌க்சன் படம் என்றால் செட்டுகளை அடித்து நொறுக்குவதும், கார்களை பறக்கவிடுவதும்தான் என்ற எண்ணத்தை தவறாக்கும் குறைவான எண்ணிக்கையிலான படங்களில் ரோனினும் ஒன்று. படத்தின் கதை மிகச் சாதாரணமானது. மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும் மெட்டல் சூட்கேஸை கைப்பற்ற வேண்டும். இந்த ஒருவ‌ரிதான் கதை. ஆனால் அதற்கு திட்டமிடுவதும், அதனை செயல்படுத்துவதும் என்றென்றைக்கும் ரசிக்கக்கூடியதாக மாற்றியிருப்பது திரைக்கதையின், இயக்கத்தின், எடிட்டிங்கின், இசையின் தனித்தன்மை எனலாம்.

படத்தின் மைய கதாபாத்திரம் சேம். சூட்கேஸை கைப்பற்ற தேர்வு செய்யப்பட்ட நபர்களில் ஒருவர். இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ராபர்ட் டி நீரோ. தனது திட்டத்தை செயல்படுத்தும் முன் அவர் மேற்கொள்ளும் ஆயத்த நடவடிக்கைகள், சூட்கேஸை கவர்தல் என்ற எளிமையான நிகழ்வின் ஆபத்தான பக்கங்களை சொல்லாமல் சொல்லிவிடுகின்றன. இந்தக் குழுவின் இன்னொரு மிஸ்டர் கூல், நடிகர் ழான் ரெனோ.

ஆ‌க்சன் படமான இதனை அற்புதமான படமாக மாற்றுவது படத்தின் நிதானம் மற்றும் அறிவு‌‌‌‌ஜீவித்தனமான திரைக்கதை. திட்டத்துக்கு தோதான நபர்களை ஒன்று சேர்ப்பதிலிருந்து மெதுவாகத் தொடங்குகிறது படம். சூட்கேஸை கைப்பற்றுவதற்கு முன்பாக ஆயுதங்களை சேக‌ரித்தல், பாதுகாப்பு எத்தகையது என்பதை சோதித்தறிதல் என்று பரபரப்பேயில்லாமல் அடுத்தடுத்து நகர்கிறது திரைக்கதை. இப்படிச் சொல்லும் போது மிக மெதுவாக நகரக்கூடிய படம் என்ற பிம்பம் ஏற்படலாம். அது தவறு.

உதாரணமாக ஆயுதங்களை சேக‌ரிக்கும் போது எதிர்தரப்பு பணத்தை வாங்கிக் கொண்டு இவர்களை சுட்டுக் கொல்ல முயல்கிறது. படகின் வெளிச்சத்தில் ஸ்னைப்பர் ஒருவன் பாலத்தில் பதுங்கியிருப்பதை கவனிக்கும் ராபர்ட் டி நீரோ அவர்களின் சதியை முறியடிக்கிறார். அவருக்கு இது சதி என்பது எப்படி தெ‌ரியும்?

படத்தின் பிற்பகுதியில் இந்த‌க் கேள்வியை ழான் ரெனோ அவ‌ரிடம் கேட்கிறார். அதற்கு நீரோ, சந்தேகம் வந்தால் சந்தேகமேயில்லை... அதில் ஏதோ இருக்கிறது. இதுதான் அவர்கள் எனக்கு கற்றுத் தந்த முதல் பாடம் என்கிறார். அவர்கள் என்றால் யார்? ரெனோ கேட்க நீரோவின் பதில் இப்படி வருகிறது, தெ‌ரியாது. இதுதான் அவர்கள் கற்றுக் கொடுத்த இரண்டாவது பாடம்.

இந்த உரையாடலில் வெளிப்படுவதுபோன்றே மர்மமாக இருக்கின்றன நீரோ யார் என்பதும். அவர் யார் என்பது கடைசி வரை தெ‌ரிவதேயில்லை. அதேபோல் பல உயிர்களை பலி வாங்கும், பல நாட்டவர்களால் தேடப்படும் அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என்பதும் கடைசி வரை சொல்லப்படுவதில்லை.

படத்தில் கார் துரத்தல் காட்சிகள் இரண்டு வருகின்றன. வாத்தியங்களை முழக்காமல், கேமராவை நடுங்கவிடாமல் காரின் வேக உறுமலை மட்டும் பின்னணி இசையாகக் கொண்டு அருமையாக படமாக்கியிருக்கும் விதம்  எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பை தராது என உறுதியாகச் சொல்லலாம். ஜப்பானிய சாமுராய்களின் பொம்மையையும், அவர்கள் கோட்டையையும் தத்ரூபமாக செய்யும் நுண்கலை கலைஞ‌ரின் அறிமுகம் படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது. அவர்தான் மாஸ்டர்கள் இல்லாத சாமுராய்களின் கதையை சொல்கிறார்.

நிழல் மனிதர்களைப் பற்றிய கதை என்பதால் அதற்கேற்ப ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் கும்பல் காட்சிகளில்கூட எவரும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் உடை அணியாமல் பார்த்துக் கொண்டார்கள் என்ற செய்தி ஒளிப்பதிவு மற்றும் படத்தின் மூட் சம்பந்தமாக படக்குழுவினர் எவ்வளவு தூரம் மெனக்கெட்டிருப்பார்கள் என்பதை உணர்த்துகிறது.

நீங்கள் நல்ல ஆ‌க்சன் படப் ‌பி‌ரியராக இருந்தால் ரோனின் உங்களின் தவிர்க்க முடியாத சாய்ஸ்.

john babu raj

சீமான் - செந்தமிழனா? ஜால்ரா தமிழனா?

இப்படியொரு தலைப்பில் இவ்வளவு சீக்கிரம் ஒரு கட்டுரை எழுத வேண்டிவரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். பல்லாயிரம் மனிதர்களின் லட்சியம் கண்முன் ச‌ரியும் போது அது குறித்து பேசாமலிருப்பதும்கூட ஒருவித வன்முறைதான்.

ஈழத்தமிழர்கள் சார்பான போராட்டத்தில் சீமானின் உழைப்பும், முயற்சியும், அர்ப்பணிப்பும் சந்தேகத்துக்கு அப்பார்ப்பட்டது. ஈழ விவகாரத்தில் காட்டிய முனைப்புக்காக கடந்த நாட்களில் அவரளவுக்கு தமிழகத்தில் யாரும் துன்புற்றதில்லை என்றே சொல்ல வேண்டும். தனி மனிதனாக அவரது போராட்ட குணம் என்றும் போற்றுதலுக்குரியது.

சீமான் இன்று தனி மனிதரல்ல. ஒரு கட்சியின் தலைவர். சீமான் சமூகத்தின் சீக்கை மாற்றிக் காட்டுவார் என்று நம்பும் பல்லாயிரம் இளைஞர்களின் வழிகாட்டி. என்னுடைய வாழ்க்கைதான் இந்த நாட்டிற்கு நான் விட்டுச் செல்லும் செய்தி என்று சொன்னார் காந்தி. ஒரு தலைவனின் வாழ்க்கை... சொல்லும், செயலும் அத்தகையதாக இருக்க வேண்டும். முக்கியமாக ஜனநாயகத்தன்மையுடன்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய சீமானின் பேச்சிலும், எழுத்திலும் ஜனநாயகத்தின் ஈரம் வற்றிவிட்டது. ஒற்றை ஆளாக காங்சிரஸை கருவறுத்ததாக தொடர்ந்து மேடையில் முழங்கி வருகிறார். அவரது எழுத்திலும் இது வெளிப்படுகிறது. வார இதழ் ஒன்றில், ஒற்றை நாவாக ஒலித்த துயரமும் துடிப்பும்தானே இன்றைக்கு காங்கிரஸை கருவறுத்தது என்று தன்னை மட்டுமே முன்னிறுத்துகிறார்.

நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள மறுக்கிற தலைமை எப்படி சீரழியும் என்பதற்கு கருணாநிதியே வாழும் சாட்சி. சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற காங்கிரஸ் மற்றும் திமுக வின் இன விரோதப் போக்கு ஒரு காரணமே அன்றி அது மட்டுமே காரணம் அல்ல. அப்படியிருந்திருந்தால் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த திமுக கூட்டணி அதைவிட மோசமான தோல்வியை பாராளுமன்ற தேர்தலில் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லையே. கருணாநிதியின் குடும்ப அரசியலும், விலைவாசி உயர்வும், இந்த நெருக்கடிகளை உணராதவராக கருணாநிதி தொடர்ந்து நடத்தி வந்த நாடகங்களுமே ஜெயலலிதாவை அரியணையில் அமர வைத்தது. ஈழ விவகாரத்துக்கும் இதில் பங்குண்டு... ஆனால் ஆட்சி மாற்றத்துக்கு அது மட்டுமே காரணமில்லை.

இந்த நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவராக ஈழ விவகாரம் ஒன்றே திமுக கூட்டணியை வீழ்த்தியதாக சீமான் நம்புகிறார். மற்றவர்களையும் நம்ப வைக்க முயற்சிக்கிறார். இந்த போலி நம்பிக்கை, அடைய வேண்டிய லட்சியத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கக்கூட உதவாது என்பதை ஒரு தலைவனாக சீமான் உணர வேண்டும்.

ஈழப் பிரச்சனை தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்ததில் சீமானின் பங்கு கணிசமானது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவரது ஒற்றை நாவு மட்டுமா இதற்காக துடித்தது? இன உணர்வை தட்டி எழுப்ப தன்னையே தீய்க்கு தந்த முத்துக்குமாரை சீமான் எப்படி மறந்தார். அவர் ஒன்றும் நாம் தமிழர் இயக்கத்தின் உறுப்பினர் அல்லவே. அதே போல் எத்தனை பேர் உயிர் தியாகம் செய்தனர். சீமானுக்கு முன்பே ஈழ விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிற நெடுமாறனுக்கு இதில் பங்கில்லையா. மே 17 இயக்கம், பொpயார் திராவிடர் கழகம் என்று எத்தனை எத்தனை அமைப்பினர். கோயம்புத்துh‌ரில் ராணுவத்தையே மறித்தவர்கள் பொpயார் திராவிடக்கழகத்தினர் அல்லவா. எந்த அமைப்பிலும் சாராத பல்லாயிரம் தனி மனிதர்களின் பங்களிப்பு புறக்கணிக்கக் கூடியதா?

சீமானுக்கு இவையனைத்தும் தொpயாததல்ல. தன்னால்தான் இந்த வெற்றி என்று சொன்னால் நாம் தமிழர் கட்சியின் திடீர் ரட்சகர் ஜெயலலிதாகூட ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதும் சீமானுக்கு தொpயும். ஒரு கட்சியின் தலைவராக அவருக்கு வெற்றியின் முழு அறுவடையும் தேவைப்படுகிறது. அதற்காக சீரழிந்த ஒரு அரசியல்வாதியின் தன்னல வழியில் சஞ்ச‌ரிக்கவும் அவர் தயங்கவில்லை என்பதுதான் நம்மை வருத்தமடையச் செய்கிறது. இது கோபம் அல்ல வருத்தம்... பொறாமை அல்ல வேதனை.

சட்டமன்றத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த ஈழம் தொடர்பான தீர்மானங்கள் வரவேற்கப்பட வேண்டியவை மட்டுமல்ல கொண்டாடப்பட வேண்டியவை. தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு குழி பறித்தவர்களுடன் ஒப்பிடுகையில் இதுவொரு மாபெரும் சாதனை. உளசுத்தியோடு ஜெயலலிதாவை பாராட்ட வேண்டியது கடமை. ஆனால் இதிலும் சீமான் தனக்கான அறுவடையிலேயே குறியாக இருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை நாம் தமிழர் கட்சி முன்னிறுத்திய போது பலரும் எதிர்த்தனர். பிரபாகரனை கைது செய்து இந்தியா அழைத்து வரவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் என்பதாலும், போர் என்றால் மக்கள் சாவார்கள் என்று பதிலளித்ததாலும் காங்கிரஸை தோற்கடிப்பதற்காக ஜெயலலிதாவை ஆத‌ரிக்கதான் வேண்டுமா என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினர். சட்டிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையாகிவிடக் கூடாது என்ற பயத்தில் நண்பர்கள் விடுத்த சந்தேக கேள்விதான் இது. சீமானால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

சட்டமன்றத்தில் ஈழம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும்,  பாரு... நான் எடுத்த தீர்மானம் எவ்வளவு ச‌ரி என்று தன்னை முன்னிறுத்தும் விதமாகவே ஜெயலலிதாவுக்கான பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் கடந்த காலத்தையும், ஆதரவு வேண்டுமென்றால் அவர்கள்தான் வர வேண்டும் என்று கதவை காங்கிரஸுக்காக அவர் திறந்தே வைத்திருப்பதையும் மனதில் இருத்திக் கொண்டே சீமான் பாராட்டு விழாக்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவரது பேச்சிலும் எழுத்திலும் தனிமனித துதிதான் மேலோங்கியுள்ளது. ஈழப் பிரச்சனைக்காக அதிமுக காங்கிரஸ் உறவை ஒதுக்கித்தள்ளும் என்று சீமான் கருதினால் அதைவிட நகைச்சுவை வேறு இருக்க முடியாது.

தமிழனின் சாபக்கேடு தனி மனித துதி. மானத்தையும் அறிவையும் வலியுறுத்திய பொpயாரின் பேரனின் தனி மனித துதி கடந்த சில நாட்களாக காதில் நாராசமாக விழுகிறது. சமீபத்தில் சீமான் கலந்து கொண்ட சினிமா விழாவில் இதனை கேட்க நேர்ந்தது. அதற்குமுன் அந்த விழாவில் சீமானுக்கு பக்கத்து இருக்கையில் இருந்தவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் திரையுலகின் கட்டுப்பாட்டை மீறி இலங்கைக்கு சென்று கலை விழா நடத்திய நடிகர் சல்மான்கான். அந்த விழாவின் விளம்பர துhதராக இருந்த அமிதாப்பச்சனை பின்வாங்கச் செய்த முழு பெருமையும் நாம் தமிழர் கட்சியினரையே சாரும். அமிதாப்புக்குப் பதில் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள்தான் சல்மான்கானும், விவேக் ஓபராயும். இவர்கள் தமிழகம் வந்தால் துரத்தி அடிப்போம் என்று சொன்ன அதே சீமானுக்குப் பக்கத்தில்தான் சல்மான்கான் சகல ம‌ரியாதைகளோடும் வீற்றிருந்தார்.

சல்மானை சீமான் துரத்தியிருக்க வேண்டும் என்பதல்ல நம் எதிர்பார்ப்பு. குறைந்தபட்சம் அந்த விழாவையாவது சீமான் புறக்கணித்திருக்கலாம். ஏனென்றால் சல்மான்கான்தான் அந்த விழாவின் சிறப்பு விருந்தினர் என்பது முன்பே தொpவிக்கிப்பட்டிருந்தது. அதேபோல் விவேக் ஓபராயின் ரத்த ச‌ரித்திரம் படத்தை தமிழ் உணர்வாளர்கள் புறக்கணிக்க அழைப்புவிடுத்த போது நாம் தமிழர் கட்சி மட்டும் அப்படத்தை ஆத‌ரித்தது. அதற்கு சீமான் ஒரு விளக்கம் அளித்தார். தம்பி சூர்யா அந்தப் படத்தில் நடிச்சிருக்கார்.

இந்த விழாவில் விஜய்யை பற்றி பேசிய சீமான், விஜய் தமிழகத்தில் ஒரு மௌனப் புரட்சியை ஏற்படுத்திவிட்டு அமைதியாக உட்கார்ந்திருப்பதாக குறிப்பிட்டார். தனியாக இருக்கும் போது தன்னால்தான் ஆட்சி மாற்றம் என்று சொல்லும் சீமான், விஜய் முன்னிலையில் விஜய்தான் ஆட்சியை மாற்றி புரட்சியை ஏற்படுத்தினார் என்று சாம்பிராணி போடுவது வழக்கமாகிவிட்டது. அதிமுக வுக்கு ஓட்டுப் போடுங்கன்னு ஒரு வ‌ரி சொல்வதுக்கே பயந்து அப்பா பின்னால் ஒளிந்து கொண்ட பிள்ளைப்பூச்சிதான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம் என்று விஜய்யின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிறவன்கூட சொல்ல மாட்டான். செந்தமிழனோ மேடைக்கு மேடை இதையே பேசி காதில் ரத்தம் வர வைக்கிறார். ஏன்.. நாங்க என்ன அவ்வளவு மடையன்களா?

விஜய்க்கும் புரட்சிக்கும் என்ன சம்பந்தம்? வெற்றியில் பங்குபோட அவரே கூச்சப்பட்டு அணில் மாதிரி உதவினோம் ஆட்டுக்குட்டி மாதிரி உதவினோம் என்று பேசுகிறார். சீமானோ எல்லாம் நீங்கதான் என்று துhக்கிப் பிடிக்கிறார். பகலவன் படத்துக்கு விஜய் கால்ஷீட் தர வேண்டும் என்பதைத் தாண்டி விஜய்க்கும் உங்களுக்கும் என்ன உறவு?

சுயநலமும், தனி மனித வழிபாடும் நேர்மையான போராட்டக்காரனுக்கு அழகல்ல. குறுகியகால லாபங்களுக்காக எதிர்காலம் குறித்து யோசிக்காதவன்

john babu raj

ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?

கமல்ஹாசன் நடித்த திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களாகிறது. கமல் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை. தமிழின் சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலை தயாரித்தால் கமல் நடித்த மூன்று படங்களேனும் அதில் இடம்பெறும். நடிகன் ஒரு முகம். திரைக்கதையாசிரியர் இன்னொரு முகம். தேவர் மகனின் திரைக்கதை தமிழின் ஆகச் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. இயக்குனராக ஹேராம், விருமாண்டி. பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என்று உதிரி முகங்கள் பல.

சினிமா ஒரு விஞ்ஞான தொழில்நுட்பமும்கூட என்பதை அறிந்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் கமல்ஹாசன் முன்னோடி. அவர் ஆளுமை செலுத்த தொடங்கிய பிறகு தமிழில் அறிமுகமான நவீன தொழில்நுட்பங்களில் அறுபது சதவீதம் அவர் வழியாக தமிழ்‌த் திரையுலகை வந்தடைந்ததே. தொலைக்காட்சியால் சினிமாவுக்கு பாதிப்பு என்று அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தொலைக்காட்சிக்கு நடிகர், நடிகைகள் பேட்டியளிக்க தடை விதித்த போது அதனை துணிந்து உடைத்தவர் கமல். தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு. அறிவியலுக்கு அணை போட முடியாது என்று அன்று அவர் சொன்னது இன்று உண்மையாகியிருக்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை நம்பியே இன்று பல படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

கமலின் குணா ஒரு மைல் கல். இன்றும் அதன் நினைவுகளில் தோய்ந்து போகிற ரசிகனை காணலாம். நிதி நிறுவன மோசடி தமிழகத்தை உலுக்குவதற்கு முன்பு வெளியானது மகாநதி. 786 நம்பர் சட்டையணிந்த நாயகன் ஆடிப் பாடும் இடமாக இருந்த சிறைச்சாலையை அதன் உண்மை குரூரத்தோடு முன் வைத்த முதல் தமிழ் சினிமா மகாநதி. தீவிரவாதிகள் ஜனங்களை காரணமின்றி கொன்றழிப்பவர்கள் என்ற ஒற்றைப்படையான விமர்சனத்தை உருவினால் குருதிப்புனல் ஓர் அற்புதம்.

யார் காதிலும் பூ சுற்றும் சகலகலா வல்லவன் ரசனையில் இருந்த ரசிகனை ரசனையின் அடுத்தடுத்த படிகளில் குணாவும், மகாநதியும், குருதிப்புனலும் ஏற்றிவிட்டன.

இன்று கமல் ரசிகன் அவர் உயர்த்திவிட்ட ரசனையின் மேல் படிகளில் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். அவனை அதற்கு மேலும் உயரச் செய்ய வேண்டிய கமலின் படங்கள் எப்படி இருக்கின்றன? அவரது ரசிகனின் ரசனைக்கு தீனி போடும் வகையில் அவை அமைந்திருக்கின்றனவா?

உறுதியாகவும், வெளிப்படையாகவும் கூறுவதென்றால்... இல்லை.

அன்பே சிவம், விருமாண்டி தவிர்த்து ஆரோக்கியமான முயற்சி எதுவும் கமலிடமிருந்து கடந்த சில ஆண்டுகளாக வரவில்லை. கிடைத்ததெல்லாம் தசாவதாரம், மன்மதன் அம்பு போன்றவையே. சகலகலா வல்லவன் ரசனைக்கு ரசிகனை கமலின் படங்களே மீண்டும் கீழிறக்குவது என்பது எவ்வளவு பெ‌ரிய துயரம்? நடமாடும் பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்படும் ஒரு கலைஞனுக்கு இந்த சறுக்கல் ஏன் நிகழ்கிறது?

கமல்தான் கமலின் பிரச்சனை. கமல் சிறந்த நடிகர். கூடவே வெற்றி பெற்ற ஹீரோ. நடிகனுக்கும், ஹீரோவுக்குமான மோதல் அவரது அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இயக்குனர் கமலுக்கு ஹீரோ கமல் ஒருபோதும் அடங்குவதில்லை. அன்பே சிவத்தில் வரும் காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் ஹீரோ கமலை திருப்திப்படுத்த புனையப்பட்டவை. அப்படத்தின் பண்படாத காட்சிகளும் இவைதான். விருமாண்டியின் அனைத்து கதாபாத்திரங்களும் மண் சார்ந்த துலக்கத்துடன் இருக்க கமலின் கதாபாத்திரம் மட்டும் ஒட்டுச் செடியாக விலகி நிற்கும்.

ஹீரோ கமலே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிறவராக இருக்கிறார். சக ஹீரோவான ர‌ஜினியே இவ‌ரின் இலக்கு. ஹீரோக்களின் ஈகோ கலெக்சனை முன்னிறுத்தியது. சிவா‌ஜியின் கலெக்சனை முந்துவதற்காக உருவானது தசாவதாரம். எந்திரனுக்கு போட்டியாக விஸ்வரூபம் அமைந்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை. கமலின் போட்டி ர‌ஜினி அல்ல. வேண்டுமானால் அமீர்கானை சொல்லலாம். தயாரிப்பாளர் கமலுக்கு போட்டி டோபி காட், பீப்லி லைவ். இயக்குனர் மற்றும் நடிகர் கமலுக்கு போட்டி தாரே ஜமின் பர். நிச்சயமாக சிவா‌ஜியோ, எந்திரனோ அல்ல.

நடிகர் கமலே ரசிகர்களின் இன்றைய தேவை. பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்த‌ரிடம் தன்னை முழுதாக கையளித்தது போல் இளம் இயக்குனர்களிடம் கமல் தன்னை ஒப்படைக்க வேண்டும். இந்த கையளித்தல் குறுக்கீடுகள் அற்றதாக இருத்தல் அவசியம்.

இயக்குனர் கமல் திறமையானவர். ஹீரோ கமலைத் தவிர எவரையும் திறம்பட வேலை வாங்கக் கூடியவர். விருமாண்டி கொத்தாளத் தேவன் பசுபதியையும், பேய்க்காமன் சண்முகராஜனையும் எப்படி மறப்பது? இந்த இரு நடிகர்களின் உச்சமாக இன்றும் விருமாண்டியே இருக்கிறது. இயக்குனர் கமல் ஹீரோ கமலை இயக்காமலிருப்பது உசிதம். அப்படி நிகழும் போதெல்லாம் இயக்குனரும், ஹீரோவும் எல்லைக் கோட்டருகே வெற்றியை தவறவிட்டு ஒருசேர தோற்றுப் போகிறார்கள். ஹேராமில் அதுதான் நடந்தது. விருமாண்டியில் அது உறுதிப்பட்டது.

பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், மைனா, ஆரண்யகாண்டம் போன்ற ஒரு முயற்சியையே கமலிடம் ரசிகன் எதிர்பார்க்கிறான். யாரிடமும் சினிமா கற்காத ஒரு அறிமுக இயக்குனரால் ஆரண்யகாண்டம் என்ற அற்புதத்தை தர இயலும் போது உலக சினிமாவை கரைத்துக் குடித்த ஐம்பது வருட அனுபவம் உள்ள கமலால் அது ஏன் சாத்தியமாகாமல் போகிறது?

சிவா‌ஜி கணேசன் குறித்து பேசும்போது நாசர் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார். சிவா‌ஜி ஒரு சிங்கம். அவருக்கு தயிர் சாதம் கொடுத்தே கொன்றுவிட்டோம். வெறும் அழுக்காச்சி படங்களில் அவரை வீணடித்ததை இப்படி வேதனையுடன் குறிப்பிட்டார். கமலும் ஒரு சிங்கம். தசாவதாரம், மன்மதன் அம்பு என்று தொடர்ந்து அவர் தயிர் சாதம் உண்பதை‌க் காண சகிக்கவில்லை. மகாநதி, குருதிப்புனல் என்று கறி சோறு உண்பது எப்போது?

கமல் சார்... ரசிகன் காத்திருக்கிறான்.

john babu raj

கௌபாய்ஸ் & ஏலியன்ஸ் - தொடரும் ஹாலிவுட்டின் தங்க வேட்டை

தங்க வேட்டையை பற்றி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கோல்ட் ரஷ் படத்தில் அமெ‌ரிக்கர்களின் தங்கத்தின் மீதான ஆசையை சாப்ளின் கிண்டல் செய்திருப்பார். தங்க வேட்டையை பற்றியதுதான் அப்படமும். மெக்கனஸ் கோல்டு பற்றி பேசினால் நாற்பது வயதுக்கு மேல் உள்ள சிலராவது திரும்பிப் பார்ப்பார்கள். தமிழகத்தை வியப்பில் ஆழ்த்திய தங்கப் புதையலை பற்றிய படம்.

இந்தியர்களுடன் ஒப்பிட்டால் அமெ‌ரிக்கர்கள் தங்கம் பயன்படுத்துவது இல்லையோ என்று தோன்றும். பெண்களின் காதில் கடுகுமணி அளவில் தங்கம் தென்பட்டால் அபூர்வம். இருந்தும் ஹாலிவுட்டின் தங்க வேட்கை அப்படியேதான் உள்ளது. தங்க வேட்டை டாலர்களை அள்ளித் தரும் கதைக்களம் என்பதை ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் அறியும்.

Jon Favreau இயக்கியிருக்கும் கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸ் திரைப்படமும் தங்க வேட்டையை பற்றியதே. பாகிஸ்தான் தீவிரவாதிகளை லெக் ஃபைட்டால் ஓரம்கட்டிய விஜயகாந்த் ஒருகட்டத்தில் சலிப்பாகி வெளிநாடுகளுக்கு தீவிரவாதிகளை தேடிச் சென்ற கதைதான் இதுவும். எவ்வளவு நாள் அமெ‌ரிக்கர்கள் தங்கப் புதையலை தேடிப் போவது? ஒரு மாறுதலுக்கு வேற்றுக்கிரகவாசிகள் தங்கம் தேடி அமெ‌ரிக்காவின் அரிஸோனாவுக்கு வருகிறார்கள். அவர்களை கௌபாய்ஸ் எப்படி விரட்டி அடித்தார்கள் என்பது கதை.

படத்தின் ஆரம்பத்தில் பாலைவனத்தில் கண் விழிக்கிறார் டேனியல் க்ரேக். காலில் செருப்பில்லை, இடுப்பில் ரத்தகாயம், கை மணிக்கட்டில் வினோதமான மெட்டல் பிரேஸ்லெட். தனது பெயர்கூட அவர் நினைவில் இல்லை.

நல்லதொரு கமர்ஷியல் படத்துக்கான எதிர்பார்ப்புடன் தொடங்குகிறதது படம். அதன் பிறகு ஹாலிவுட்டின் கிளிஷேக்கள் ஒவ்வொன்றாக அணிவகுக்கின்றன. படம் முடியும் போது இதுக்கா இவ்வளவு பிரமாண்டம் என மனதில் அயர்ச்சி ஒட்டிக் கொள்கிறது.

ஹாலிவுட்டுக்கு ஒரு வசதி. எதை கற்பனை செய்தாலும் அதனை எடுக்கக் கூடிய விஸ்தீரண வியாபாரம் அவர்களுக்கு உண்டு. தொழில்நுட்பம் குறித்து சொல்லத் தேவையில்லை. தேவைப்பட்டால் புதிய தொழில்நுட்பத்தையே உருவாக்குவார்கள். கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸிலும் இதுதான் கை கொடுக்கிறது.

டேனியல் க்ரேக் வழிப்பறி கூட்டத்தின் தலைவர். தேடப்படும் குற்றவாளி. தங்கத்தை தேடிச் செல்கிறது அவர்கள் கூட்டம். கொஞ்சம் தங்கத்துடன் க்ரேக் வீடு திரும்புகிறார். அதே தங்கத்துக்காக வரும் வேற்றுக்கிரகவாசிகள் க்ரேக்கின் மனைவியை கொல்கிறார்கள், க்ரேக் காயத்துடன் தப்பிக்கிறார். வேற்று கிரகவாசிகளை அழிக்கும் பிரேஸ்லெட் சந்தர்ப்பவசமாக க்ரேக்கின் கையில் மாட்டிக் கொள்கிறது.

பாலைவனத்தில் விழித்துப் பார்க்கும் க்ரேக்குக்கு எதுவும் நினைவில்லை. அவரை ஒரு பெண் பின் தொடர்கிறாள். ஏலியன்ஸின் தாக்குதலில் மரணமடையும் அவளை நெருப்பில் போட உயிர்த்தெழுகிறாள். அவனும் ஒரு வேற்று கிரகவாசிதான். ஆனால் வேறு கிரகம். தங்கத்துக்காக பூமிக்கு வந்திருக்கும் ஏலியன்ஸ்கள் அவளது கிரகத்தையும் தாக்கி அழித்துவிட்டார்கள். இவள் மட்டும் தப்பித்து பூமியை காப்பாற்றும் பொருட்டு மனிதர்களுக்கு உதவ வந்திருக்கிறாள்.

மலைகளுக்கு நடுவில் தங்களது விண்கலத்தை நிறுத்தி ஏலியன்ஸ்கள் தங்கம் எடுக்கிறார்கள். இறுதிப் போர் நடக்கிறது. மனிதர்கள் ஏலியன்ஸை வெற்றிக் கொள்கிறார்கள். க்ரேக்கின் பிரேஸ்லெட்டை உபயோகித்து விண்கலத்தை தகர்ப்பதுடன் அந்தப் பெண்ணும் இறந்து போகிறாள்.

இதில் உடனடியாக வரும் கேள்வி படத்தில் ஹாரிசன் ஃபோர்டுக்கு என்ன வேலை? கிளைமாக்ஸ் வரை ஹாரிசன் ஃபோர்டுக்கு நாலுவ‌ரி டயலாக்தான். கிளைமாக்சில் ஒன்றிரண்டு ஏலியன்ஸை கொல்கிறார், அவ்வளவே. கொசு அடிக்க பீரங்கி உபயோகித்த கதைதான்.

கிளி‌ண்ட் ஈஸ்ட்வுட்டின் கௌபாய் படங்களில் மனதை பறி கொடுத்தவர்கள் என்றால் இந்தப் படம் ஒரு சோதனை. கௌபாய் படங்களின் கதாபாத்திரங்களின் மூடும், தன்மையும் வேறு மாதிரி. அழுக்கும் சோம்பலுமாக அது வேறு உலகம். தனித்துவமான ஃபிரேமிங், ஒளிப்பதிவு, இசை. சொல்வதைவிட பார்ப்பது நலம். பத்துப் படங்கள் வேண்டாம், இரண்டு போதும். செர்‌ஜியோ லியோன் இயக்கத்தில் 1966ல் வெளிவந்த தி குட் தி பேட் அண்ட் தி அக்ளி, 1968ல் வெளியான ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் தி வெஸ்ட். இரண்டு படங்கள் கூட வேண்டாம். ஒன்று போதும். அதுவும் கஷ்டம் எனில் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் தி வெஸ்ட் படத்தில் ஹீரோ ரயிலில் வந்திறங்கும் ஆரம்பக் காட்சி மட்டும் போதும். கௌபாய் படங்களின் உலகம் புரிந்துவிடும்.

Jon Favreau இயக்கியிருக்கும் படத்தில் கௌபாய் படங்களின் அழுக்கு இருக்கிறது ஆன்மா இல்லை. க்ரேக்கின் சண்டை ஜேம்ஸ்பாண்ட் கௌபாய் உடையில் சாகஸம் செய்வது போலிருக்கிறது. எனினும் படத்தின் சுவாரஸியமூட்டும் அம்சம் இவர்தான். கட்டுடலும், அதைவிட இறுகிய முகமுமாக அசத்துகிறார். ஏலியன்ஸைப் பார்க்க பிரிடேட்டர், ஜேம்ஸ் கேமரூனின் ஏலியன் இரண்டின் கலவை போலிருக்கிறது. அவை தாவி சண்டையிடுகையில் ப்ரிஸ்ட் படத்தின் ட்ராகுலாக்கள் நினைவில் வந்து போகின்றன. ஒரே வித்தியாசம் அவைகளுக்கு கண்கள் இல்லை, இதற்கு உண்டு.

கௌபாய் ஃப்ளேவர் இல்லாதது போலவே ஏலியன் படங்களின் விறுவிறுப்பும் இதில் இல்லை. ப்ரிடேட்டர், ஏலியன் படங்களில் மர்மத்தை படிப்படியாக விலக்கும் திரைக்கதை சாதுரியத்தின் சாயல்கூட இதில் இல்லாதது ஏமாற்றமே.

தங்கம் அணிகலனாக அழகுக்கு பயன்படுகிறது. அதுதவிர ஆக்கப்பூர்வமான பயனேதும் இருப்பதாக‌த் தெ‌ரியவில்லை. அப்படியிருக்க அகோரமான ஆடை அணியாத ஏலியன்ஸுக்கு எதற்கு டன் கணக்கில் தங்கம்?

கதை விவாதக்குழு இந்த‌க் கேள்விக்கு பதில் தேடியிருந்தால் கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸ் படத்தை பார்க்கும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டிருக்காது.

john babu raj

டயானா ம‌ரியம் குரியன் நயன்தாராவான கதை

டயானா ம‌ரியம் குரியனாக இருந்த நயன்தாரா இந்துவாக மதம் மாறியிருக்கிறார். இதனை கிறிஸ்தவ அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. நயன்தாராவுக்குப் பதில் பிரபுதேவா மதம் மாறியிருந்தால் இந்நேரம் ராமகோபாலன் கொடி பிடித்திருப்பார். இப்போதோ இந்து மதத்தின் உறுப்பினர் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்திருக்கிறது. ராமகோபாலன் கப்சிப்பாக, கிறிஸ்தவ அமைப்புகள் குதிக்கின்றன. வேதாகமத்தில் எந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்த வார்த்தைகளை பயன்படுத்தி தூற்றியிருக்கிறார்கள். வேதாகம சாபம் சும்மா விடாது என நடுத்தெருவில் மண்ணெடுத்து சாபமிட்டிருக்கிறது ஒரு அமைப்பு. இவர்களை மனதில் வைத்துதான் ஏசு, உங்களில் பாவம் செய்யாதவன் முதல் கல் எறியட்டும் என்று கூறியிருக்க வேண்டும். பிதாவே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று தெ‌ரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்.

நயன்தாரா விரைவில் மாஸ்டரை திருமணம் செய்து செட்டிலாகப் போகிறார் என்பது உறுதி. இனி அவரை வைத்து ஸ்கூப் எழுத முடியாதே என்ற கலக்கம் பத்திரிகைகளுக்கு. மதமாற்றம், கிறிஸ்தவ அமைப்புகளின் கண்டனம் என்று சூழல் ஜெகஜோ‌தியாக இருக்கிறது. தவிர கள்ளச் சாமியார்களின் படுக்கையறை அந்தரங்கங்களும் இப்போதைக்கு இல்லை. வாரமிருமுறை பத்திரிகைகள் தங்கள் ஃபோகஸை நயன்தாராவை நோக்கி திருப்பி, நயன்தாராவின் ரகசியம், எ‌க்‌ஸ்ளூஸிவ்ஸ் என்று தட்டி விடுகின்றன. இந்த செய்திகளெல்லாம் சேர்ந்து நயன்தாராவை பிடிவாதக்காரராக, நினைத்ததை சாதிக்க எதையும் செய்பவராக, வளர்ப்பானேன்... ஏறக்குறைய ஒரு வில்லியின் சித்திரத்தை ஜனங்களின் பொதுப்புத்தியில் பதிய வைத்திருக்கின்றன. யாருக்கு‌த் தெ‌ரியும்... ஒருவேளை இதில் உண்மையும் கலந்திருக்கலாம்.

இந்த நேரத்தில் நயன்தாராவின் ஆரம்பகால படங்கள் நினைவுக்கு வருகின்றன. சத்தியன் அந்திக்காடு தனது மனசின் அக்கரை படத்தில் டயானா ம‌ரியம் குரியனை நயன்தாரா என்ற பெய‌ரில் அறிமுகப்படுத்தினார். செம்மீன் ஷீலா நீண்ட காலத்திற்குப் பிறகு அந்தப் படத்தில் நடித்திருந்தார். ஜனங்களின் கவனம் முழுக்க அவர் மீது குவிந்திருந்தது. இன்னசென்ட், ஜெயராம், சித்திக் என நடிப்பில் மலை முழுங்கியவர்கள் வேறு படத்தில் இருந்தனர். கம்யூனிஸ்டும், எளிய விவசாயியுமான ஒடுவில் உண்ணி கிருஷ்ணன், சுகுமாரி தம்பதியின் மகளாக நயன்தாரா நடித்திருந்தார். எளிய வாயில் புடவை. மேக்கப் இல்லாத முகம். முதல் படம் அவரைப் பற்றி மலையாளிகள் மனதில் உருவாக்கிய சித்திரம் அவரது கதாபாத்திரத்தைப் போலவே எளிமையாக இருந்தது. வெளுத்த வெள்ளந்தியான பெண்.

இந்த இமேஜை மெருகேற்றுவது போலவே அடுத்தடுத்தப் படங்கள் நயன்தாராவுக்கு அமைந்தன. மோகன்லாலின் விஷ்மயதம்பத்தில் நயன்தாரா சக்கை போல் பெருத்திருந்தார். நாலு படம் தாக்குப் பிடித்தால் அதிகம் என்றுதான் தோன்றியது. கதையும் குளறுபடி. கோமா ஸ்டே‌ஜில் இருக்கும் நயன்தாராவின் ஆவி உதவி கேட்டு மோகன்லாலிடம் தஞ்சம் பெறுவதாக கதை அமைத்திருந்தார்கள். இன்னொரு மணிசித்திரதாழுக்கு ஆசைப்பட்டு பாசில் குழப்பியடித்திருந்தார்.

நாட்டுராஜாவிலும் மோகன்லால்தான் ஹீரோ. இப்போது இந்தப் படத்தைப் பார்த்தாலும் வளர்ந்த சிறுமி என்ற எண்ணத்தையே நயன்தாராவின் தோற்றம் தருகிறது. படத்தைப் பார்க்க முடியாதவர்கள் யு டியூபில் நாட்டுராஜாவின் பாடல் காட்சியை பார்க்கலாம். வெள்ளை உடையில் நயன்தாரா வாய் நிறைய சிரிப்புடன் வளைய வருவார். அவரது வெள்ளந்தி சித்திரத்தின் உச்சம் எனலாம் இந்தப் படத்தை.

மம்முட்டியுடன் நடித்த ராப்பகலில் பெ‌ரிய வீட்டில் வேலை செய்யும் ஏழைப் பெண். வெகுளி. யானை மீது ஏறி மம்முட்டி‌யிட‌ம் திட்டு வாங்கி ஓடும் காட்சி இப்போதும் மனக்கண்ணில் உள்ளது. இதுதவிர தக்சரவீரன் என்ற படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார்.

இப்போது யோசிக்கையில் இந்தப் படங்களில் ஒரு ஒற்றுமை தெ‌ரிகிறது. ஆரம்பகால படங்களில் அவர் எளிய வெகுளிப் பெண்ணாகவே சித்த‌ரிக்கப்பட்டிருந்தார். அவரது குழந்தமை நிரம்பிய முகம் அதற்கு மிகவும் அணுக்கமாக இருந்தது. 2005ல் தமிழில் அறிமுகமான போது வெள்ளந்தி சாயம் வெளுக்கத் தொடங்கியது. முதல் படம் ஹரியின் ஐயா. தார் சாலையில் அத்திரி புத்திரி என்று குட்டை ஸ்கூல் யூனிஃபார்மில் தொடைகள் தெ‌ரிய நயன்தாரா ஆடினார். அதுவரை கெண்டைக்காலுக்கு மேல் அவரது உடை உயர்ந்ததில்லை. டும்டும் பிப்பீ டும்டும் பிப்பீ என்று இடையை ஆட்டிய போதுதான் ரசிகன் முதலில் அவ‌ரின் தொப்புளை த‌ரிசித்தான். அதன் பிறகு நயன்தாரா கவர்ச்சி ஏணியிலிருந்து இறங்கவேயில்லை.

சிம்புவை காதலித்த போதும், மாஸ்ட‌ரின் காதலில் விழுந்த போதும் நயன்தாராதான் தலைப்பு செய்தி. அதிலும் மாஸ்ட‌ரின் காதல் விஷயத்தில் மீடியாக்கள் அவரை பிழிந்து எடுத்தன. திருமணமான ஒருவரை எப்படி காதலிக்கலாம், ரமலத் என்ற அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா? மகளிர் அமைப்புகள் பிளிறிக் கொண்டு இறங்கியதைப் பார்த்தால் நயன்தாராவை சட்னி ஆக்கிவிட்டுதான் அடங்குவார்கள் போலிருந்தது. அனேகமாக முடி திருத்துவோர் சங்கம் தவிர்த்து அனைத்து சங்கங்களும் இந்த அறப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டன.

இதில் இன்னொரு வேடிக்கையும் நடந்தது. திருமணமான குப்பனோ சுப்பனோ காதலித்தால் ஊடகங்கள் கள்ளக் காதல் என்று நாலுகாலத்தில் செய்தி வெளியிடும். அதுவே பிரபலங்களாக இருந்தால் கள்ளக் காதல் காதல் என்று சுருங்கி காவியத்தன்மை பெறும். இந்த பாரபட்சத்தால் அறச்சீற்றம் கொண்ட சிலர் பிரபுதேவாவின் காதலை கள்ளக் காதல் என்றும் நயன்தாராவை கள்ளக் காதலி என்றும் குறிப்பிட்டு தங்களது சீற்றத்தை தணித்துக் கொண்டனர்.

நயன்தாராவை இப்போது வெள்ளந்தியான பெண் என்று சொன்னால் சிரிப்பார்கள். அவர் கடந்து வந்த பாதை காரியவாதி என்ற பிம்பத்தை அவருக்கு அளித்திருக்கிறது. நமது ஆச்ச‌ரியமெல்லாம், மனசின் அக்கரையில் அறிமுகமான டயானா ம‌ரியம் குரியனின் குழந்தைத்தனமான முகத்துக்குப் பின்னால் இப்படியொரு முதிர்ச்சியான நயன்தாரா ஒளிந்திருந்தாரா என்பதுதான். இல்லை சினிமா என்ற வலிமையான ஊடகம் அவரை மாற்றியதா? உண்மை எதுவாக இருந்தாலும் டயானா ம‌ரியம் குரியன் என்ற வெகுளியான பெண்ணாக புறத் தோற்றத்தில் கூட நயன்தாராவால் இனி மாறுவதென்பது சாத்தியமில்லை. இதனை பறைசாற்றுவது போல் அபத்த நாடகத்தின் உச்ச காட்சியைப் போல் அமைந்திருக்கிறது ஞாயிறன்று நடந்த நயன்தாராவின் மதமாற்றம். ஒரு ரசிகனாக நயன்தாராவிடம் கூற இருப்பது ஒன்றுதான்.

குட்பை... டயானா ம‌ரியம் குரியன்.

john babu raj

லெனின் விருது விழா - மௌனத்தின் பேரோசை


சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது. பிரபல எடிட்டரும், இயக்குனரும், குறும் படங்களுக்கு தமிழில் களம் அமைத்தவருமான லெனின் பெயாpல் வழங்கப்படும் விருது விழா. தமிழ்ஸ்டுடியோ இணையதளம் இந்த விருதை வருடந்தோறும் வழங்கி வருகிறது. குறும்பட, ஆவணப்பட துறையில் சீhpய பங்களிப்பு செலுத்துகிறவராக இருக்க வேண்டும் என்பதை விருதுக்குhpயவாpன் தகுதியாக நிர்ணயித்திருக்கிறhர்கள். அந்தவகையில் இந்த வருடத்துக்கான தேர்வு சாலப் பொருத்தம். விருது பெற்றவர் காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக அறியப்படும் ஆர்.ஆர்.சீனிவாசன்.


குறும் படம், ஆவணப் படம் சம்பந்தமான விருது விழா என்பதால் சிறப்பு விருந்தினர்களின் பேச்சு அதையொட்டியதாக இருக்கும் என நாம் எதிர்பார்த்ததில் தவறில்லை. இனிய அதிர்ச்சியாக அப்படியெதுவும் இல்லை. தனியார் மயமாகும் புறவழிச்சாலைகள், கல்பாக்கம் அணுஉலை ஆபத்து, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று போpன் துhக்குத் தண்டனை என்று செவிக்கும், சுரணைக்கும் செமத்தியான உணவு. யுடிவி யின் தலைமை நிர்வாகி தனஞ்செயன், கவிஞர் தேவதேவன், இயக்குனர் பாலுமகேந்திரா, மருத்துவர் புகழேந்தி ஆகியோர் விழாவில் பேசினார்கள். இறுதியாக விருது பெயரை தாங்கியிருக்கும் லெனின்.


சுண்டியெடுத்த வார்த்தைகளில் கவிதை வடிப்பவர் தேவதேவன். ஆனால் மேடை ஏறி மைக் பிடித்தால் வார்த்தைகள் முட்டும். எல்லா மேடைகளையும் போலவே இந்த மேடையிலும் அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டார். கலை என்றhல் அழ்ந்த அமைதி, ஒன்றுமில்லாத வெறுமை. தான் அமர்ந்திருந்த நாற்காலியை சுட்டிக் காட்டி, அது நிசப்தமாக இருக்கிறது என்றhர். தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய படம் போலிருந்தது அவரது பேச்சு. இரண்டு வார்த்தை... உடனே விளம்பர இடைவெளி. கோர்வையாக அவர் ஏதேனும் பேசிவிடுவாரோ என்று பார்வையாளர்கள் அச்சப்படுவதுபோல அரங்கத்தில் அப்படியொரு அமைதி. கலை அமைதிக்கு உதாரணமாக அவர் அப்பாஸ் கியாரஸ்தமியின் படங்களை குறிப்பிட்ட பிறகு இறுக்கம் சற்று தளர்ந்தது. என்ன அருமையான உதாரணம். தேவதேவன் கவிதையில் முயலும் மௌனத்தைதான் கியாரஸ்தமி தனது திரைப்படங்களில் சாத்தியமாக்குகிறhர். அந்த மௌனம் சாதாரணமானதல்ல, பல தினங்கள் உங்களை துhங்கவியலாமல் செய்கிற வலிமையுடையது.


தேவதேவனின் உரை பாலுமகேந்திராவை உற்சாகப்படுத்தியிருந்தது. அவரும் மௌனத்தின் காதலர். எனது மௌனங்களை அப்படியே விட்டுவிடுங்கள் என்று இளையராஜhவிடம் hP hpக்கார்டிங்கின் போது சொன்னதை நினைவுகூர்ந்தார். எனது மௌனங்களை புhpந்து கொள்ள முடியாதவர்களால் என்னுடைய வார்த்தைகளையும் புhpந்து கொள்ள முடியாது என்றhர்.
சாதகமான மேடைகளில் எல்லாம் சினிமா ரசனையை பாடமாக்குங்கள் என்று பாலுமகேந்திரா கேட்டு வருகிறhர். உங்கள் வரவேற்பறைக்கு தினம் 100 படங்கள் உங்களது அனுமதியில்லாமல் வருகின்றன. அவற்றில் மோசமானதை ஒதுக்கிற ரசனை நமது பிள்ளைகளுக்கு வேண்டாமா? நியாயமான இந்தக் கேள்விக்கு இன்னும் எத்தனை காலம் மௌனத்தை பதிலாக தரப் போகிறேhமோ.


மருத்துவர் புகழேந்தியின் பேச்சு அணுஉலை ஆபத்தை பற்றியதாக இருந்தது. இவரும், ஆர்.ஆர்.சீனிவாசனும் இணைந்து பணியாற்றியிருக்கிறhர்கள். எல்லாமே சமூகப்பணி. ஜப்பான் ஃபுகுஷிமா அணுஉலை விபத்தின் விளைவுகள் டோக்கியோவில் உணரப்படுகின்றன.  அங்குள்ள தாய்மார்களின் தாய்ப் பால் விஷமாகிவிட்டது. குடி நீhpலும் அணுக்கதிர் ஆபத்து. கல்பாக்கத்திலும் இப்படியொரு விபத்து ஏற்படாது என்று யாரும் இதுவரை உத்தரவாதம் தரவில்லை என்பதை புகழேந்தி நினைவுப்படுத்தினார். கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோது சென்னை நிலநடுக்கம் வருவதற்கான சாத்திக்கூறில் ஸேhன் 2 ல் இருந்தது. ஸேhன் 2 hpக்டர் அளவில் ஆறு வரையான நிலநடுக்கத்தை தாங்கக் கூடியது. கல்பாக்கம் அணுமின் நிலையம் 6 hpக்டர் அளவை தாங்கும் விதத்தில் கட்டப்பட்டது. இப்போது சென்னை ஸேhன் 2 லிருந்து 4 கிற்கு நகர்ந்துள்ளது. அதாவது 7.5 hpக்டர் அளவு நிலநடுக்கம்வரை சென்னையில் ஏற்பட சாத்தியமுள்ளதாக வல்லுனர்கள் தொpவிக்கிறhர்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் எவ்வளவு பொpய ஆபத்தில் இருக்கிறேhம். புகழேந்தி சொன்ன இன்னொரு தகவல் முக்கியமானது. ஃபுகுஷிமாவுக்கும் டோக்கியோவுக்கும் இடைப்பட்ட துhரம் 240 கிலோ மீட்டர்கள். கல்பாக்கத்துக்கும் சென்னைக்கும் இடையேயானது வெறும் 60 கிலோ மீட்டர்கள் மட்டுமே.


கூடங்குளத்தைவிட அதிக ஆபத்தானது கல்பாக்கம். ஆனால் கூடங்குளத்தில் போராட்டங்கள் நடக்கின்றன. கல்பாக்கத்தில் எதிர்ப்பின் சுவடேயில்லை, எல்லோரும் அமைதியாக இருக்கிறhர்கள் என்று புகழேந்தி ஆச்சாpயப்பட்டார். அணுஉலை ஆபத்தைவிட ஜனங்களின் இந்த மௌனத்தை கண்டே அவர் அதிகம் அச்சப்பட்டதாகப் பட்டது.
மௌனம்... மௌனம்.. மௌனம்...


பெருவாhpயான மக்களின் மௌனமும், அந்த மௌத்திலிருந்து உருவாகும் ஒருசிலாpன் போராட்டமுமே லெனின் விருதை உருவாக்கியதோ என்று எண்ண வைத்தது, தமிழ்ஸ்டுடியோவை தொடங்கி நண்பர்களுடன் அதனை நடத்தி வரும் அருணின் அறிமுகவுரை. புறவழிச் சாலைகள் தனியார்வசமாகி சுங்கம் வNலிப்பதை எந்த எதிர்ப்புமில்லாமல் நாம் சகித்துக் கொள்வதை தனது பேச்சில் அருண் குறிப்பிட்டார். லெனின் விருதுக்கான தேர்வில், போராட்டத்தை முன்னிறுத்தும் படைப்பை...படைப்பாளியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். ஆர்.ஆர்.சீனிவாசன் அதற்கு முழுத் தகுதியானவர்.


வியாபார நிறுவனமொன்றின் தலைமை நிர்வாகியாக இருப்பதாலா தொpயவில்லை தனியார்மயம் வேண்டும், அதனால் மக்களுக்கு தரமானவை கிடைக்கும் என்றhர் தனஞ்செயன். பிள்ளைப் பேச்சு. குறும்படம் எடுப்பவர்கள் சினிமாவுக்கு வரும் போது கமர்ஷியலாக யோசிக்க வேண்டும், அப்போதான் வியாபாரமாகும் என்றெல்லாம் பேசினார். குறும்படம் என்பது ஏதோ கூட்டுப்புழு பருவம் போலும், சினிமா எடுப்பதுதான் முழுமையடைந்த வண்ணத்துப்பூச்சி போலும் அவர் கருதிக் கொண்டிருப்பது ஆச்சாpயமளித்தது. இதற்கு கடைசியில் ஆணியடித்தார் லெனின். பாpணாமனின் கவிதையில் தொடங்கி சகல பக்கங்களிலும் உடுக்கடித்தார். நீங்க உங்க வேலையைப் பாருங்க, நாங்க குறும் படத்தையும், ஆவணப் படத்தையும் பார்த்துக்கிறேhம் என்றபோது கரகோஷம். பியூச்சர் ஃபிலிம் ஆசாமிகளின் மீது அவர் கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வு, அவர் எத்தனை துhரம் பாதிக்கப்பட்டிருக்கிறhர் என்பதை உணர்த்தியது.


ஆர்.ஆர்.சீனிவாசன் ஏற்புரையாற்றினார். மாஞ்சோலை தொழிலாளிகள் போலீஸhல் தாக்கப்பட்டு 17 பேர் மரணமடைந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். தாமிரபரணியிலிருந்து அவர்களின் சடலங்களை எடுத்ததும், அந்தப் படுகொலைக்கு திருநெல்வேலி மௌனம் சாதித்ததும் இன்றும் அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது. அவாpன் ஒரு நதியின் மரணத்தை பார்த்தவர்களுக்கு ஏற்படும் அதே உணர்ச்சி. இந்த மௌனம்தான் நதியின் மரணம் என்ற ஆவணப் படத்தை எடுக்கத் துhண்டியதாக குறிப்பிட்டார். விழாவில் சினிமா குறித்த கட்டுரை வாசிக்க திட்டமிட்டு அதனை எழுதத் தொடங்கியதாகவும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவாpன் துhக்கு தண்டனை காரணமா அதனை முடிக்க முடியாததையும் அவர் குறிப்பிட்டார். கடந்த சில தினங்களாக இந்த துhக்குத் தண்டனைக்கு எதிராக நண்பர்களுடன் ஆலோசித்து வருவதையும், 18 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சிறை நோக்கி செல்லவிருப்பதையும்,. மாத இறுதியில் லட்சம் பேர் திரளும் போராட்டத்தை ஒருங்கிணைக்க இருப்பதையும் அவர் சொன்ன போது, போராட்டமே அவரது வாழ்க்கையாக இருப்பதை உணர முடிந்தது. இன்று நாம் தெருவில் இறங்கி போராடாவிட்டால் மூன்று அப்பாவிகளின் கொலைக்கு நாம் சாட்சிகளாகயிருப்போம் என்றhர்.


முள்ளிவாய்க்கால், தனியார்மயம், அணுஉலை ஆபத்து, சினிமா ரசனை, பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு துhக்குத் தண்டனை... எல்லாவற்றிலும் மௌனமே நமது எதிர்வினையாக இருக்கிறது. கலை அமைதி என்பது போராட்டத்துக்கான விதை என்றhல் நமது மௌனம் சுரணையின்மையின் ஆழ் துயில். விழா முடிந்து இரவில் வீடு திரும்புகையில் ஒரேயொரு கேள்வி மனதில் நிறைந்திருந்தது. இந்த துயிலிலிருந்து நாம் எப்போது விழித்தெழப் போகிறேhம்?

john babu raj